Also Watch
Read this
By: Manigandan Raja

அருவியில் வெள்ளப்பெருக்கு :
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மணிமுத்தாறு அருவி உள்ளது இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மாஞ்சோலை,நாலுமுக்கு,ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக நேற்று மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து இன்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை நீடித்து வருகிறது குறிப்பாக ஊத்து பகுதியில் 172 மிமீ மழையும் நாலுமுக்கில் 164 மிமீ மழையும் பதிவாகியுள்ளது இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் அருவியை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கியுள்ளனர்.