Also Watch
Read this
By: Manigandan Raja

அழுகிய காய்கறிகளில் சமையல் :
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த அம்மா உணவகம், பேருந்து நிலைய விரிவாக்க பணி காரணமாக தற்போது தற்காலிக பேருந்து நிலையத்தில்
இந்த அம்மா உணவகம் இயங்கி வருகிறது.
தினசரி காலையில் இட்லி, பொங்கல், மதிய வேளையில் சாம்பார் சாதம், தயிர் சாதம் உள்ளிட்டவை மலிவான விலையில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கி அவர்களின் பசியை
போக்கி வருகிறது.
இந்நிலையில் இன்று உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் விஜய், நகர் மன்ற துணைத் தலைவர் தேன்மொழி உள்ளிட்டோர் மதிய வேலையில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.இந்த ஆய்வில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக உள்ளதா என உணவை உண்டு ஆய்வு செய்தனர், தொடர்ந்து சமயலறை பகுதிக்கு சென்று ஆய்வு செய்த போது பொதுமக்களுக்கு சமைக்க அழுகிய காய்கறிகளை பயன்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அழுகிய காய்கறிகளை பயன்படுத்தியோர் மீதும், காய்கறிகளை கொள்முதல் செய்து வழங்கிய அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved