news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews புனித அந்தோனியார் ஆலய திருத்தேர் பவனி
tv

Also Watch

tv

Read this

புனித அந்தோனியார் ஆலய திருத்தேர் பவனி

கோகூர், நாகை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திருத்தேர் பவனி

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுரை அடுத்த கோகூரில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் ஆண்டுத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைப்பெறும்.

இந்த ஆண்டுக்கான ஆண்டுத் திருவிழா கடந்த ஜூன் 2 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய தேர்பவனி வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. இதனையொட்டி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அந்தோணியார், மாதா, சம்மனுசு ஆகியோர் எழுந்தருளினர்.

முன்னதாக, ஆலய பங்குத்தந்தை தேவ சகாயம் தலைமையில் நவநாள் ஜெபம் உள்ளிட்ட சிறப்புத்திருப்பலி நடைபெற்றது. பின்னர் தேர் சப்பரத்தை புனிதம் செய்து துவக்கி வைத்தார். ஆலய
வளாகத்திலிருந்து துவங்கிய தேர் சப்பரமானது வாத்திய இசை முழக்கத்தோடு முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிருஷ்தவர்கள் பங்கேற்று சாம்பிராணி சட்டியை கையில் ஏந்தியபடியும், ஆடு மாடு, கோழி உள்ளிட்டவற்றை காணிக்கையாக வழங்கியும் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர்.

இந்த தேர் பவனியில் சுற்று வட்டாரமின்றி வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று புனித அந்தோணியாரை மனமுருகி வழிப்பட்டனர்.

Related Link
இளைஞரை தாக்கிய நபரை 3 மாதமாக கைது செய்யவில்லை என புகார்

இளைஞரை தாக்கிய நபரை 3 மாதமாக கைது செய்யவில்லை என புகார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் அணி 13-வது இடம்

0
1 min agoshare
ஏசியன் லெ மான்ஸ்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved