Also Watch
Read this
By: Manigandan Raja

சென்னை திருவொற்றியூர் தேரடி மெட்ரோ நிலையத்தில் ரயில் நின்றபோது கதவுகள் திறக்காததால் பரபரப்பு. விம்கோ நகரில் இருந்து மீனம்பாக்கம் நோக்கி சென்ற மெட்ரோ ரயிலின் கதவுகள்
சுமார் 15 நிமிடங்கள் திறக்கப்படாமல் இருந்ததால் பயணிகள் இறங்கவும் ஏறவும் முடியாமல் தவித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மெட்ரோ ஊழியர்கள் பழுதான கதவை சரி செய்து திறந்து பயணிகளை வெளியேற்றினர். பின்னர் டோர் பழுது சரிசெய்யப்பட்டு, பயணிகளை ஏற்றிக்கொண்டு ரயில்
மீனம்பாக்கம் நோக்கி புறப்பட்டது. இந்த தொழில்நுட்ப கோளாறால் மெட்ரோ சேவை சுமார் 30 நிமிடங்கள் தாமதமானது.