Also Watch
Read this
By: Manigandan Raja

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் சாரல் மழை விட்டு விட்டு பரவலாக பெய்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அவ்வப்போது காற்றின் வேகம் அதிகளவு காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் கடற்கரை கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நாட்டுப் படையில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். நேற்று நாட்டுப் படகில் மீன் பிடிக்க சென்ற கோவளம் பகுதியை சேர்ந்த ஐந்து மீனவர்கள் மீன்பிடித்து விட்டு கரை திரும்பும் போது காற்றின் வேகத்தால் திடீரென எழுந்த ராட்சத அலையில் நாட்டு படகு சிக்கி படகு தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

படகிலிருந்து மீனவர்கள் கடலில் விழுந்த நிலையில் தத்தளித்தனர். கடற்கரையோரம் நின்ற சக மீனவர்கள் உடனடியாக சென்று மீனவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். நல்வாய்ப்பாக
மீனவர்களுக்கு எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.
மேலும் ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்த நிலையில் படகில் உள்ள என்ஜின், மீன்வலை, முற்றிலும் சேதமடைந்தன.