Also Watch
Read this
By: Manigandan Raja

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் பகுதியில் சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சரக்கு லாரி அதிகாலை அம்மம்பாளையம் பகுதியில் சாலையோரம் சரக்கு லாரியை நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் சேலத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் சொகுசுப் பேருந்து அம்மம்பாளையம் பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற லாரியின் பின்பகுதியில் மோதி
விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் காயம் இன்றி உயிர்த்தப்பினார்கள்.

இதுகுறித்து ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அதிகாலையில் தனியார் சொகுசு பேருந்து லாரியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளான பதபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி
வைரலாகி வருகிறது.