Also Watch
Read this
By: Manigandan Raja

சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் :
வட மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகள், சுரங்கப் பாதைகளில் அதிக அளவு மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
அதேபோன்று குஜராத் மாநிலம் சூரத் நகரில் பெய்த தொடர் மழையால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கியது. மழையில் நனைந்து வாகனங்கள் பழுதானதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
கார் மூழ்கும் அளவுக்கு தேங்கியுள்ள மழைநீர் - மக்கள் அவதி :

மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி மக்கள் அல்லல் பட்டு வரும் நிலையில்,லோனவாலா ((Lonavala)) பகுதியில் சிக்கியுள்ள மக்களை NDRF குழுவினர் படகு மூலம் மீட்டு பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
குறிப்பாக ஹுட்கோ காலனி ((Hudco Colon)) பகுதியில் கார் மூழ்கும் அளவுக்கு மழை தேங்கியுள்ளதால், அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியில் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.