news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கரூர் துயரம், திமுக மனு வாபஸ், என்ன நடந்தது?
tv

Also Watch

tv

Read this

கரூர் துயரம், திமுக மனு வாபஸ், என்ன நடந்தது?

திட்டமிட்டபடி கரூர் செல்லும் முதலமைச்சர்

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் விஜய் சந்திக்க தடை கோரிய திமுகவின் இடையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நபராக எங்கும் முதலமைச்சர் சேர்க்கப்படவில்லை என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில் திரும்ப பெறப்பட்டது.

திமுகவுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
முதலமைச்சரின் நிகழ்ச்சியை உச்சநீதிமன்றம் ஒழுங்குபடுத்த விரும்புகிறீர்களா? உதவிகள் வழங்குவது எப்படி வழக்கு விசாரணையை பாதிக்கும்? என திமுகவிற்கு சரமாரியாக கேள்வி எழுப்பி, உச்சநீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க கூடாது என நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றத்தின் சாதகமான பதிலால், வரும் வெள்ளிக்கிழமை முதலமைச்சர் விஜய் கரூர் செல்வது உறுதியாகி உள்ளது. முதலமைச்சர் கரூர் செல்ல தடை கோரிய திமுகவிற்கு பேரதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

உச்சநீதிமன்றத்தில் திமுக மனு
கரூரில், தவெக நிகழ்ச்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பேச தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்யப் போவதாக கூறியதை தொடர்ந்து, மனுவை திரும்பப் பெற விரும்புவதாக திமுக கூறியது.

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களை நேரில் சந்திக்கவும், அவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கவும் முதல்வர் விஜய் வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
மனுவில் கூறி இருப்பதாவது;
தமிழக அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா, ‘கரூரில் ஒரு கணக்கு வழக்கு உள்​ளது. அதை முடிக்​காமல் விட​மாட்​டோம். இதற்குப் பதிலடி தரப்படும், சட்​டம் தன் கடமையைச் செய்​யும்’ என்​று பேசி உள்​ளார். அவரது பேச்சு புலன் விசா​ரணை​யில் தலை​யிடு​வ​தாக உள்​ளது. இதற்கிடையே, ஜூலை 10ஆம் தேதி முதலமைச்சர் விஜய் கரூர் சென்று கூட்​டத்​தில் உயிரிழந்த, காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலைக்​கான உத்​தர​வு​, 10 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்க இருப்​ப​தாக செய்தி வெளியாகி உள்ளது. இது, சிபிஐ புலன் விசா​ரணை​யை பாதிக்கும்.

தடை விதிக்க கோரிக்கை
கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் புலன்​ வி​சா​ரணையை சிபிஐ நிறைவு செய்​யும் வரை, தமிழக முதலமைச்சர் விஜய், வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்ள அமைச்சர்​கள் ஆதவ் அர்​ஜு​னா, ஆனந்த், நிர்மல் குமார் உள்​ளிட்டோர் எதிர்க்கட்சிகளை மிரட்​டும் வகையில், வழக்கு குறித்துப் பேச தடை விதிக்க வேண்​டும். பாதிக்கப்​பட்ட நபர்​களுக்கு நலத்​திட்​ட விவரங்​களை, சிபிஐயிடம் தாக்​கல் செய்​து​விட்​டு, உச்ச நீதி​மன்றம் வகுக்​கும் விதிகளின்படி வழங்குமாறு உத்தர​விட வேண்​டும். சாட்சிகள், ஆதா​ரங்களை கலைக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்​ஜு​னா​வுக்கு எதி​ராக வழக்​கு பதிவு செய்ய சிபிஐக்கு உத்​தர​விட வேண்​டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

சரமாரி கேள்வி எழுப்பிய நீதிபதிகள்
இதையடுத்து, இந்த வழக்கை நீதிபதி விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. திமுக தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது;
உங்கள் கோரிக்கைகள் அனைத்துமே அரசியல் நோக்கம் கொண்டவை. அரசியல் மேடையாக, நீதிமன்றத்தை மாற்றக்கூடிய தன்மை கொண்டவை. முதல்வர் விஜய்யை குற்றம் சாட்டப்பட்டவர் என கூறி உள்ளீர்கள். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர் குறித்த சிபிஐ பட்டியலில் முதலமைச்சர் விஜய் பெயர் இல்லை. எனவே, உங்கள் வாதம் தவறானது.

அரசியல் மேடையாக மாற்றாதீர்...
கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பேச தடை விதிக்க வேண்டும் என்றால், அவர்களின் பேச்சு சுதந்திரத்தை நீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பாக உதவிகளை வழங்குவது, வழக்கின் போக்கை மாற்றக் கூடும் என நீதிமன்றம் கருதவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்தால், பதிலுக்கு நீங்கள் கருத்து தெரிவியுங்கள். ஆனால், அதை ஒரு வழக்காக தொடுத்து உச்ச நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்றாதீர்.

திரும்ப பெற்ற திமுக
அரசியல் எதிரிகளின் கருத்துகளுக்கு எதிராக எப்படி உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்? ஆகவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய விரும்புகிறோம். நாங்கள் தள்ளுபடி செய்யட்டுமா? நீங்கள் மனுவை திரும்பப் பெற்றுக் கொள்கிறீர்களா?
இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து, தனது மனுவை திமுக தரப்பில் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.

Related Link
யாருடன் கூட்டணி? குழப்பும் திருமாவளவன்

யாருடன் கூட்டணி? குழப்பும் திருமாவளவன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய கடற்படையின் புதிய தயாரிப்பு

0
5 mins agoshare
ஐ.என்.எஸ். மகேந்திரகிரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau