Also Watch
Read this
By: Manigandan Raja

பஞ்ச பூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கக்கூடிய உலகப் புகழ் பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஏகாம்பரநாதர் கோவிலின் உள் பிரகாரத்தில், அமெரிக்காவில் வசிக்கும் பரதநாட்டிய பெண் கலைஞர் ஒருவர், வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் வரும் திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடி, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், புனிதமான கோவில் வளாகத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதற்கு பக்தர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.