Also Watch
Read this
By: Web Team

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம்போல் மழைநீர் தேங்கியதால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மருத்துவமனைக்கு உள்ளே செல்ல முடியாமலும், உள்ளே சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் ஒரு பிரிவில் இருந்து மறு பிரிவிற்கு செல்ல முடியாமலும் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவி ஒருவரை அழைத்து சென்ற நபர், மருத்துவமனைக்குள் செல்ல முடியவில்லை என வசைபாடினார்.