Also Watch
Read this
By: Manigandan Raja

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள எஸ் புதூர் கிராமத்தில் அங்குள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வந்தது இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் பத்திற்கு மேற்பட்ட கிராம விவசாயிகள் நெல்மணிகளைக் கொட்டி விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் சுமார் ஒரு மாதமாக கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளால் கொண்டு வந்து கொட்டப்பட்ட நெல் மணிகள் கொள்முதல் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் மற்றும் நெல் மணிகள் முளைத்து வீணாகும் அந்த அவல நிலை தான் தற்போது ஏற்பட்டுள்ளது
இது குறித்து விவசாயிகள் அதிகாரிகளை தொடர்பு கொண்டு நெல் மூட்டுகளை கொள்முதல் செய்ய வலியுறுத்தியும் அலட்சிப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர் உடனடியாக வேளாண்துறை அதிகாரிகளும் பார்வையிட்டு நெல் மணிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.