Also Watch
Read this
By: Manigandan Raja

திருவள்ளூர் மாவட்டம் காரனோடை அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி, கோவில், வங்கி அருகே டாஸ்மாக் கடைகள் உள்ளதால் பாதிப்பு ஏற்படுவதாகவும், தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாளை ஒட்டி டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசாரிடம் 717 கடைகளை மூடுவதாக முதலமைச்சர் அறிவித்தபோது, ஒருநாள் மட்டும் கடையை மூடிவிட்டு மீண்டும் திறந்து விற்பனை நடப்பதாகவும் குற்றம் சாட்டினர்.