Also Watch
Read this
By: Manigandan Raja

திமுகவினர் போராட்டம் :
திமுக இளைஞரணி கூட்டத்தில் கடந்த பல தேர்தல்களில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு பல சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்ற காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த தேர்தலிலும் திமுகவினரின் உழைப்பினால் 5 சட்டமன்ற உறுப்பினர்களையும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் பெற்றனர்.
ஆனால் நன்றி உணர்ச்சி இல்லாமல் ஒரே இரவில் அணி மாரி சென்றனர் எனவும் திமுகவுக்கு செய்த துரோகத்தினை நாளை பதவி கொடுத்த புதிய கூட்டாளிகளுக்கும் செய்வார்கள் பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள் தான் காங்கிரஸார் என திமுக இளைஞர் அணி கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை எதிர்த்து சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே தீர்மான நகலை எரித்து போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த
திமுகவினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாங்கு வாதம் ஏற்பட்ட நிலையில் .

போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்த நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகே திரண்ட திமுகவினர் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில்.
ஈடுபட்டனர் அப்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த ராகுல் காந்தியின் உருவ பொம்மை திமுகவினர் எரித்து காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர் பாதுகாப்பு பணியில்
இருந்த போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்த பொழுது திமுகவினருக்கும் காவல் ஆய்வாளர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved