news-tamil-logo

3/16/2026, 3:16:58 PM

news-tamil-logo
more
Home districtnews என் வீட்ல எத்தனை பேர் இருக்காங்கனு தெரியுமா?
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

என் வீட்ல எத்தனை பேர் இருக்காங்கனு தெரியுமா?

லிஸ்ட் போட்டு சொன்ன விஜய்

Posted on: Feb 13, 2026 07:47 AM

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தவெக தலைவர் விஜய் சேலம் புறப்பட்டு, வந்து சேர்ந்தார்.

தவெக நிர்வாகிகள் கூட்டம்
சேலத்தில் இன்று விஜய் தலைமையில் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு க்யூ ஆர் கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. சேலம் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் திடலுக்குள் தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்; மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதி அளிக்கப்படுகிறது. தவெக நிர்வாகிகள், ஒவ்வொருவராக திடலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தவெக கூட்டத்தில் விஜய் பேசியதாவது;

நம்மை நிரூபிக்கும் பவர்
நம்மை ஏளனமாக பார்க்கும்போது, தாழ்வாக நடத்தும்போது நாம் நம்மை நிரூபிக்க வேண்டும் என ஒரு புள்ளி தோன்றும் எந்த நேரத்தில் நம்மை கேலியும், கிண்டலும் செய்கிறார்களோ அங்கிருந்துதான் நம்மை நிரூபிக்கும் பவர் ஸ்டார்ட் ஆகிறது என பேச தொடங்கிய தவெக தலைவர் விஜய்

தமிழ்நாடு தான் என் வீடு
விஜய் வீட்டை விட்டு வெளியே வா... விஜய் பனையூரை விட்டு வெளியே வா... என்று சொல்பவர்களுக்கு என் வீடு எங்க இருக்கு என்று தெரியுமா? என்னை சீண்டி பார்ப்பவர்களுக்கு நான் சொல்கிறேன். என் தாய்நாடான தமிழ்நாடு தான் என் வீடு.

நீதி கேட்டு வந்திருக்கேன்

உங்க கிட்ட ஓட்டு மட்டும் கேட்கவில்லை; நீதிகேட்டு வந்திருக்கிறேன். தன்னை நேசித்த மக்களுக்காக அரசியலுக்கு வந்தான் இந்த விஜய், அது ஒரு தப்பா? நான் எல்லாத்தையும் ஒட்டுமொத்தமாக விட்டுட்டு வந்தேன்; அது ஒரு தப்பா?

என் வீட்டில் 8 கோடி பேர்
என் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா? என் வீட்டில் 8 கோடி பேர் இருக்கிறார்கள். ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களும் என் சொந்தம். தமிழ்நாட்டின் முதல் படை வீரனாக, முதல் பாதுகாவலனாக நிற்பதே எனது குறிக்கோள்.  

இது என்னங்க நியாயம்?

நான் மக்களை சந்திக்கவோ, இல்லை மக்கள் என்னை சந்திக்கவோ, எனக்கு உரிய பாதுகாப்போ, அனுமதியோ தரமாட்டாங்க. மற்ற கட்சிகளுக்கு தரும் உரிமையை ஏன் எங்களுக்கு தருவதில்லை; இது என்னங்க நியாயம்?
இவ்வாறு தவெக தலைவர் விஜய் பேசினார். 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குனி சோமவார தேய்பிறை பிரதோஷம்

1
43 mins agoshare
rani(3)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved