Also Watch
Read this
By: Web Team

தமிழகத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வருபவர்கள் எல்லாம் பாஜகவிற்கு ஆதரவாளர்கள் என்றும், அவர்கள் மதசார்பின்மையை ஆதரிக்க கூடியவர்கள் அல்ல எனவும் விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே விசிக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக கூட்டணியில் இருந்து ஏன் வெளியே வரவில்லை என கேட்டு தம்மை ஆத்திரமூட்டுவது தான் சிலரது நோக்கமாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக சாடினார்.