Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் வேட்டியம்பட்டியில் நடந்த எருது விடும் விழாவில் ஏராளமான காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தன.
வேட்டையம்பட்டி பகுதியில் முதல் முறையாக நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
போட்டியில் குறிப்பிடப்பட்ட தூரத்தை குறைவான வினாடிகளில் கடந்த காளைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில் சீறி பாய்ந்த காளைகளை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.