Also Watch
Read this
By: Manigandan Raja

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் டிப்ரியூ, ராஜ், கிரீன்சன் ஜான்சன் கென்னடி, மைக்கேல், ரூபன் உள்ளிட்ட 6 மீனவர்கள் கடந்த 27 ஆம் தேதி தங்கச்சி மடத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது கடந்த 29 ஆம் தேதி படகு இஞ்சின் பழுதானதால் 2 நாட்களாக கடலில் தத்தளித்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பகுதியில்
மீன் பிடித்துக் கொண்டிருந்த சுந்தரவல்லி என்ற விசைப்படகில் தகவல் கொடுத்தனர்.

அவர்கள் மீன்வளத் துறைக்கு கொடுத்த தகவலின் பெயரில் மீன்வளத்துறையினர் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்று அவர்களுக்கு குடிநீர் உணவு வழங்கி மீட்டு நாகை மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.