Also Watch
Read this
By: Manigandan Raja

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்குட்ட 11 வது வார்டில் மழை நீர் வடிகால் பணி முறையான திட்டமிடல் இல்லாமல் நடைபெறுவதாக பகுதி மக்கள் குற்றச்சாட்டு
மழைநீர் வடிகால் பணி காரணமாக கடந்த 8 மாதமாக சாலை குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இன்றி தவித்து வருவதாக வேதனை குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் மோசமான சாலையால் குடிநீர் லாரிகள் கழிவுநீர் லாரிகள் வர முடியாத சூழல்.
கழிவு நீர் வெளியேற வழி இல்லாமல் குடியிருப்பு பகுதியில் வெளியேறுவதால் சுகாதார சீர்கேட்டில் பகுதி மக்கள் அவதி 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் அடிப்படை வசதி வேண்டி பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
வெங்கடேஸ்வரா நகர் பகுதி மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு திருவேற்காடு நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் தேவைப்படும் பணிகளை உடனடியாக முடித்து தருவதாக திருவேற்காடு நகராட்சி ஆணையர் உறுதி.