Also Watch
Read this
By: Manigandan Raja

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கொட்டபட்டியில் உள்ள இந்திரா காலனியில் கடந்த சில ஆண்டுகளாகவே முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என்று
கூறப்படுகிறது.
மேலும் அந்த பகுதியில் தனியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்தாலும் அதில் நீரேற்றம் செய்யப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் குடிநீருக்காக கடும் சிரமத்திற்கு ஆளான மக்கள் தங்கள் பகுதிக்கு முறையான குடிநீர் வழங்கிடக்கோரி மணப்பாறை - குளித்தலை சாலையில் கொட்டபட்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால மணப்பாறை - குளித்தலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவம் பற்றிய தகவல் இருந்த மணப்பாறை போலீசார் மற்றும் ஊராட்சி செயலாளர் நிகழ்விடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர்.