Also Watch
Read this
By: Manigandan Raja

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள மேட்டூர் கிராமத்தில் அடுத்தடுத்த வீடுகளில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா, பார்த்திபன் ஆகியோர் தங்களின் வீட்டின் முன்பு விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.
காலையில் எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து திருடி செல்லப்பட்டு இருப்பது தெரிய வந்தது இதனை அடுத்து கொள்ளை சம்பவம் தொடர்பாக வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் மர்ம மனிதர்கள் மூன்று பேர் கிராமத்திற்குள் புகுந்து இருசக்கர
வாகனங்களை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.