Also Watch
Read this
By: Web Team

கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் தரைப் பாலத்தின் மேல் தண்ணீர் செல்கிறது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தடை கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved