Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே 80 சென்ட் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வேலி அமைக்க முயன்ற முன்னாள் அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, வட்டாட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆதிதிராவிடர் காலனிக்கும், முன்னாள் வருவாய் ஆய்வாளர் திருமலைசாமிக்கு சொந்தமான இடத்திற்கும் நடுவே ஓடை அமைந்துள்ளது.
அந்த ஓடையை திருமலைசாமி ஆக்கிரமித்து வேலி அமைக்க முயன்றதாக அப்பகுதியினர் புகார் கூறினர்.
இது குறித்து பேசிய திருமலை சாமி, தாம் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்றும், நிலத்தை அளவிட தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved