Also Watch
Read this
By: Web Team

சேலம் மாவட்டம் சித்தர்கோவில் அருகே நிலத் தகராறில் மூதாட்டி மற்றும் அவரது மகனை கும்பல் தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது.
முருங்கப்பட்டி மேல்காடு பகுதியை சேர்ந்த மூதாட்டி செல்லம்மாளின்தந்தையின் பெயரில் உள்ள மூன்றரை ஏக்கர் நிலத்தை, செல்லம்மாளின் தம்பி மதியழகன் என்பவர் போலி சான்றிதழ் மூலம் தனது பெயருக்கு மாற்றி, அதில் வெங்கடாஜலம் என்பவருக்கு 25 சென்ட் நிலத்தை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட நிலத்தில் வெங்கடாஜலம் தரப்பினர் மரங்களை வெட்டினர்.
இதனை தட்டிக்கேட்ட மூதாட்டி செல்லம்மாள் மற்றும் அவரது மகனை அந்த கும்பல் கடுமையாக தாக்கினர்.