Also Watch
Read this
By: Manigandan Raja

தடுப்புச் சுவரில் அரசு பேருந்து மோதல் :
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தின் வழியாக பெங்களூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முரார்பாளையம் மேம்பாலத்தில் உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமான நிலையில் மேம்பாலத்தின் மீது பேருந்து தொங்கியபடி நிற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, பேருந்தில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு மாற்றுப் பேருந்தில் அனுப்பப்பட்ட நிலையில் பேருந்தை மீட்கும் பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved