Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசு பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து அடுத்தடுத்து இரண்டு கார்கள் மீது மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். மதுரையில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பேருந்து வந்தபோது ராமநத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர் திசையில் வந்து கொண்டிருந்த இன்னோவா மற்று ஷைலோ கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில், 2 கார்களிலும் பயணம் செய்த 3 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 2 வயது ஆண் குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved