Also Watch
Read this
Posted on: Jun 21, 2025 02:24 AM
By: Web Team

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி பூங்கா அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பைக் மோதி தூக்கி வீசப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
காவிரி நகர் பகுதியைச் சார்ந்த 75 வயதான லட்சுமி நகராட்சி பூங்காவில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், டீ குடிக்க சாலையை கடந்த போது வேகமாக வந்த பைக் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் பைக்கில் சென்ற இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved