Also Watch
Read this
By: Web Team

மதுரை வாடிப்பட்டி அருகே அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் போதிய இடவசதியின்றி நெல்மணிகள் சாலையில் குவியல் குவியலாக கொட்டப்பட்டிருக்கும் நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
தனுச்சியம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நெல்கொள்முதல் நிலையம் அருகே அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை எந்தவித பாதுகாப்பும் இன்றி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புறவழிச்சாலையில் குவித்து வைத்துள்ளனர்.
மேலும் மழையில் நனைந்த நெல்மணிகளை உலர வைக்க முடியாமல் இருப்பதாகவும், விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved