Also Watch
Read this
By: Web Team

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சிமலையொட்டிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் கன மழை பெய்து வருவதால், மலையோர கிராமங்களில் ரப்பர் பால் எடுக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
கீரிப்பாறை, காளிகேசம், கரும்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு மற்றும் தனியார் தோட்டங்களில் ரப்பர் பால் எடுக்கப்படும் நிலையில், மழை காரணமாக அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.