Also Watch
Read this
By: Manigandan Raja

திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் :
சிறந்த பரிகார ஸ்தலமாக வழங்கக்கூடிய திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
பள்ளி கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். கோவில் கடல்
நாளைக்கு நெருப்பு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் பொது தரிசனம் மற்றும் ரூபாய் 100 கட்டணம் தரிசன வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கோவில் வளாகம் திருவிழா காலம் போல காட்சியளித்தது. நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அடிப்படை வசதிகளை கூடுதலாக அமைத்து கொடுக்க
பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved