Also Watch
Read this
By: Web Team

மும்பையில் இருந்து 182 பேருடன் தாய்லாந்து சென்றுக் கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடி குண்டு இருப்பதாக வந்த தகவலால், விமானம் அவசர அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரமாக கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து விமானத்தில் அதிகாரிகள் சோதனை செய்ததில், சந்தேகப்படும் படியான எந்தப் பொருளும் இல்லாததால் இது வழக்கமான புரளி என்று கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : பீகாரில் உள்ள 6.5 லட்சம் பேரை தமிழக வாக்காளர்களாக மாற்ற முயற்சி தமிழகத்தை தனதாக்கிக் கொள்ள பிரதமர் மோடி தில்லுமுல்லு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved