மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.சதுரகிரியில் குவியும் பக்தர்கள்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது.இங்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளும் விடிய விடிய நான்கு கால பூஜைகளும் நடைபெற்றது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.கோயில் பகுதியில் பாதுகாப்பு பணி தீவிரம் மகா சிவராத்திரி பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகப் பகுதி மற்றும் தாணிப்பாறை அடிவார பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர், மற்றும் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். Related Link மினி மாரத்தான் போட்டி