Also Watch
Read this
By: Web Team

நெல்லை மாவட்டம் முக்கூடலில் இருந்து ஆலங்குளம் செல்லக்கூடிய பிரதான சாலை, கடுமையாக சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். முக்கூடல் பஜார் பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள் மட்டும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு சாலை பல்லாங்குழி போல் காட்சி அளிப்பதாக கூறியுள்ள பொதுமக்கள், சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் தனியார் கல் குவாரிகள் மற்றும் கிரஷர்களில் இருந்து அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளாலேயே சாலை இந்த அளவுக்கு சேதமடைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved