Also Watch
Read this
By: Web Team

சென்னை, திருவொற்றியூரில் உள்ள வடசென்னை மலையாளிகள் சங்கத்தில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது, மலையாள மொழி பேசும் மக்கள் ஏராளமானோர் குடும்பத்தினருடன் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டனர்.
திருவொற்றியூர் நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள வடசென்னை மலையாளிகள் சங்கத்தில், திருவோணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. சென்னையில் வாழ்ந்து வரக்கூடிய பெரும்பான்மையான மலையாளிகள் குடும்பம் குடும்பமாக தங்களுடைய பாரம்பரியத்தை உணர்த்தும் உடையில் வந்திருந்தனர்.
இந்த ஓணம் கொண்டாட்டத்தில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட உணவு பொருட்கள், உடைகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டு வந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.
மாவேலி மன்னர் வேடமணிந்தவருக்கு செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டு, அத்தப்பூ கோலமிட்டு பெண்கள் ஓணப்பாட்டு பாடி உற்சாக நடனமாடினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved