Also Watch
Read this
Posted on: Jan 25, 2026 01:06 PM
By: Manigandan Raja

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது பல்வேறு பகுதிகளில் அறுவடை பணிகள் துவங்க பெற்று நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த மழையின் காரணமாக திருவாரூர் அருகே கானூர் ஓடாச்சேரி தென்ஓடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் பத்து நாட்களில்
அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான நெல் பயிர்கள் முற்றிலுமாக சாய்ந்து நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
ஏற்கனவே பெய்த மழையில் விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்பு அடைந்த நிலையில் தற்பொழுது பெய்த மழையின் காரணமாக நெல் பயிர்கள் சேதமடைந்து அறுவடை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் உடனடியாக வேளாண் துறை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் நிவாரணம் மட்டுமல்லாமல் வருடந்தோறும் பயிர் காப்பீடு செய்து வருகிறோம்.
அந்த காப்பீடு விவசாயிகளுக்கு கிடைக்கப் பெறுவதில்லை எனவும் ரேண்டம் முறையில் தேர்வு செய்து நன்றாக விளைந்துள்ள நிலங்களை கணக்கீடு செய்கின்றனர் இதனால் பாதிக்கப்பட்ட
விவசாயிகளுக்கு காப்பீடு கிடைக்கப்பெறுவதில்லை எனவும் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விதிகளை தளர்த்தி புதிய விதிகளை மத்திய மாநில அரசுகள் வகுக்க வேண்டும்.
அப்படி செய்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved