Also Watch
Read this
Posted on: Mar 16, 2026 02:33 PM
By: Fyrose Banu

வாலாஜாபேட்டை ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பங்குனி சோமவார தேய்பிறை பிரதோஷ நாளில் திரளான பக்தர்கள் பிரதோஷ நாதரை கோயில் முழுவதும் வலம் வந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
சோமவார தேய்பிறை பிரதோஷம்
வாலாஜாபேட்டை பகுதியில் காசி மன்னர் வழிபட்ட திருத்தலமான ஸ்ரீ காமாட்சி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பங்குனி மாத சோமவார தேய்பிறை பிரதோஷம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
நந்தி பகவானுக்கு மகா தீபாரதனை
முன்னதாக கோயிலில் இருக்கும் நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், தேன், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், கரும்பு, ஜூஸ், அரிசி, மாவு, குங்குமம், கதம்பொடி, திருநீறு உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
பக்தி பரவசத்துடன் வழிபட்ட பக்தர்கள்
அதனைத்தொடர்ந்து பல்வேறு வகையான பூ மாலைகள் மற்றும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிரதோஷ நாதரை கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் சிவபூதகன வாத்தியங்களுடன் நமச்சிவாய என பக்தி கோஷங்களை எழுப்பி கோயிலை முழுவதும் வலம் வந்து பிரதோஷ நாதர் முன்பாக பெண்கள் ஆண்கள் என பலர் சிவபுராணம் தேவாரம் உள்ளிட்ட சிவ பாடல்களை பாடியபடி சிவனை மனதில் நினைத்தவாறு பக்தி பரவசத்துடன் சுவாமியை வழிபட்டு சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved