Also Watch
Read this
By: Web Team

சென்னை, கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் 3ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பல்கலைக் கழக வேந்தரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், நடிகர் சிவக்குமார் மற்றும் ஓவியர் சந்துரு ஆகியோருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா பல்கலைக்கழக விழாவில் பங்கேற்றது தான், தாம் நிறுவ நினைக்கும் அரசியல் மாண்பு என்றும், எதிர்காலத்தில் இந்த அரசியல் மாண்பு தொடர வேண்டும் என்றும் பேசினார்.