Also Watch
Read this
By: Web Team

ஈரோடு அருகே உரிய அனுமதியில்லாமல் கீழ் பவானி கால்வாயின் கரையோரங்களில் இருந்த மரங்களை வெட்டிய மர்ம நபர்களை, அப்பகுதி மக்கள் வாகனங்களுடன் சிறைபிடித்து காஞ்சிக்கோவில் போலீசாரிடம் ஓப்படைத்தனர்.
காஞ்சிக்கோவில் அடுத்த பெத்தாம்பாளையம் பகுதி வழியாக செல்லக்கூடிய கீழ்பவானி கால்வாயின் கரையோரத்தில் உள்ள மரங்களை, மர்மநபர்கள் சிலர் வெட்டினர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் விவரங்களை விசாரித்த போது அனுமதியின்றி மரங்களை வெட்டியது தெரிய வந்தது.