Also Watch
Read this
By: Manigandan Raja

அறந்தாங்கியில் அமைந்து அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ வீரமாகாளியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது. அறந்தாங்கி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் அம்மனின் ஆலயம் அறந்தாங்கி நகரில் அமைந்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, பிரசித்தி பெற்ற ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாத பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆடி மாதம் முழுவதும் நடைபெறுகின்ற திருவிழாவில் கடந்த 21ம் தேதி செவ்வாய்கிழமை காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது.

விழா தொடங்கியது முதல் ஒவ்வொரு நாளும் அந்தந்த மண்டகப்படிதாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. மேலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தினையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீ வீரமாகாளியம்மனை எழுந்தருள செய்தனர். தேர் சக்கரத்தில் ஊர் முக்கியஸ்தர்கள் தேங்காய் உடைத்து தேர் வடத்தை தொட்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து அறந்தாங்கி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் தேரை வடம் தொட்டு இழுத்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் பொதுமக்கள் திரண்டிருந்து சாமி தரிசனம்
செய்தனர்.அறந்தாங்கி காவல்த்துறையினர் 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.