Also Watch
Read this
By: Manigandan Raja

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள ராஜாக்கூரைச் சேர்ந்த திரைப்பட நடிகர் சூரி. தனது சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் தனது நண்பர் விமலுடன் பங்கேற்று விழாவில் கிராம இளைஞர்களுடன் குத்தாட்டம் போட்டு ஆடி பாடி மகிழ்ந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
ராஜக்கூரில் உள்ள அருள்மிகு ஶ்ரீ காளியம்மன் கோவில் முளைப்பாரி உற்சவம் கடந்த 29ஆம் தேதி நடைபெற்றது. இதில் அதே ஊரைச் சேர்ந்த பிரபல தமிழ்திரைப்பட நடிகர் சூரி கலந்துகொண்டு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றார்.

இந்நிலையில் இந்தவிழாவில் தனது நண்பர்களான நடிகர் விமல், ஜீவா உள்ளிட்டவர்கள் வருகை தந்து பங்கேற்ற நிலையில், அவர்களை சூரி ஆரத்தழுவி வரவேற்று கோவிலில் வழிபாடு செய்ய வைத்தார்.
தொடர்ந்து மாலையில், நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலத்தில் சூரி மற்றும் விமல் பங்கேற்ற நிலையில், அதனைத்தொடர்ந்து கிராம இளைஞர்களுடன் குத்தாட்டம் போட்டு ஆடி பாடி மகிழ்ந்தனர். இதுகுறித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.