Also Watch
Read this
By: Manigandan Raja

காவிரியில் நீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டித்து, தமிழ்நாட்டில் உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆணையிட்ட பிறகும் நீர் தர மறுப்பது டெல்டா விவசாயத்தை பாலைவனமாக்கும் என அவர் எச்சரித்துள்ளார். குறுவை சாகுபடி பொய்த்துவிட்ட நிலையில், சம்பா சாகுபடியும் கேள்வி குறியாகியுள்ளதால், தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.