Also Watch
Read this
By: Web Team

2026 சட்டமன்ற தேர்தலுக்காக, பீகாரில் உள்ள ஆறரை லட்சம் வாக்காளர்களை தமிழக வாக்காளர்களாக மாற்றி, தமிழகத்தை தனதாக்கிக் கொள்ள அனைத்து விதமான தில்லுமுல்லு வேலைகளையும் பிரதமர் மோடி திட்டமிட்டு செய்து வருவதாக எம்.எல்.ஏ. வேல்முருகன் குற்றம் சாட்டினார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்நாட்டில் பாஜக கால் ஊன்றாமலும், வேர் ஊன்றாமலும் தடுத்து நிறுத்திட வேண்டும் என்று கூறினார்.