Also Watch
Read this
By: Web Team

திருவாரூரில் தாமதமாக சிகிச்சை அளித்து உயிரிழப்புக்குக் காரணமான தனியார் மருத்துவர், 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்தது.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணிபுரியும் பிரபுவின் தந்தை சோமராஜூக்கு, முதுகு தண்டுவட அறுவைச் சிகிச்சைக்கு பிறகு மஞ்சள் காமாலை அறிகுறி தென்பட்டது.
எனவே, டி.எம்.சி. மருத்துவமனையில் சேர்த்தபோது, மருத்துவர் நடராஜ், உடனடியாக சிகிச்சை அளிக்காமல் ஏற்கெனவே எடுத்த டெஸ்ட்களையே மீண்டும் எடுக்கும்படி கூறி காலம் தாழ்த்தியுள்ளார்.
மேலும், மோசமான நிலையில் டிஸ்சார்ஜ் செய்து திருச்சிக்கு பரிந்துரை செய்த நிலையில், சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு சோமராஜ் உயிரிழந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved