Also Watch
Read this
By: Web Team

சென்னை திருவொற்றியூர் ஏழாவது வார்டு தந்தை பெரியார் நகரில் 40 ஆண்டாக சாலை வசதியில்லாததை கண்டித்து சேறும் சகதியுமான சாலையில் மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பாதையை தனியார் நிறுவனம் உரிமை கோரும் நிலையில், அந்நிறுவனத்திடம் பேசி சாலையை அமைத்து தர கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.