Also Watch
Read this
By: Web Team

கோயம்புத்தூர் அன்னூரில் பேருந்து நிலையம் மற்றும் வார சந்தைகளில் சுற்றித் திரிந்த 30க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள நாய்களை, நாய் பிடிப்பவர்களிடன் உதவியுடன் பிடித்து, கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் தடுப்பூசி போட்டனர். தடுப்பூசி போடப்பட்ட நாய்களுக்கு அடையாள குறியீடு வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது.