Also Watch
Read this
By: Web Team

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்கானூரணியில் உள்ள அரசு கள்ளர் பள்ளி மாணவர் விடுதியில் சக மாணவரை அடித்து துன்புறுத்தியதாக மூன்று சிறார்கள் மற்றும் அதனை வீடியோ எடுத்து பகிர்ந்த ஒரு சிறார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர் விடுதியில், அரசு தொழிற்பயிற்சி மாணவர்கள் சிலர் ஒரே அறையில் தங்கி படித்து வந்த நிலையில், ஒரு மாணவரை, சில மாணவர்கள் நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்திய வீடியோ வெளியானது.
பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ராகிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கவனக்குறைவாக இருந்ததாக விடுதி வார்டன் பாலமுருகன் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.