Also Watch
Read this
By: Web Team

கோவையில் மும்மதத்தினர் முன்னிலையில் நடைபெற்ற மதநல்லிணக்க திருமண விழாவில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கோவை கோட்டை மக்கள் நல்வாழ்வு மன்றம் சார்பில், போத்தனூர் பகுதியில் நடைபெற்ற விழாவில், திருச்சி, திருப்பூர், கோவை மற்றும் கேரளாவை சேர்ந்த 6 இஸ்லாமிய ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது.
இதில் கோவை மாவட்ட அரசு தலைமை காஜி, அஷ்ட பைரவர் கோவில் பைரவர், சர்ச் பாதிரியார்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, மணமக்களுக்கு 2 சவரன் தங்கம், ஸ்டீல் கட்டில், பீரோ, குக்கர், எவர் சில்வர் பொருட்கள், திருமண வேட்டி, சேலை, குர் ஆன் ஆகியவை வழங்கப்பட்டன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved