Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் சோழபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆரணி பேரூராட்சியில், தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாமல் மழைநீர் வடிகால்வாய் மற்றும் கழிவு நீர் கால்வாய்களை, தூர்வாரும் நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் தொழிலாளர்களுக்கு உடல் நலம் பாதிக்கும் என்பதால், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.