Also Watch
Read this
Posted on: Feb 10, 2026 02:25 PM
By: Fyrose Banu

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலம் தென்னகத்து புதுவை என அனைத்து மக்களாளும் போற்றப்படும் புண்ணிய பூமியான புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தல ஆண்டுப் திருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புனித அந்தோணியார் திருத்தலப் பெருவிழா
தொடர்ந்து 13 நாட்களாக நடைபெற்று வந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தலப் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி மதுரை மறைமாவட்டம் மேனாள் பேராயர். அந்தோணி பாப்புசாமி தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
புனித அந்தோணியார் திருவுருவம் தாங்கிய சப்பர பவனி
திருவிழா திருப்பலிக்கு தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமாரி, விருதுநகர், மதுரை மற்றும் பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக திருவிழாவை முன்னிட்டு காலை புனித அந்தோணியார் திருவுருவம் தாங்கிய சப்பர பவனி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் உப்பை தூவி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved