Also Watch
Read this
By: Manigandan Raja

திருவிழா ஜல்லிக்கட்டு :
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள தவசிமடை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஜல்லிக்கட்டு போட்டி இன்று துவங்கியது.
ஜல்லிக்கட்டு போட்டியில் திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து 800 காளைகளும், 400 மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
காளைகளும், மாடு பிடி வீரர்களும் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தான் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் வாடி வாசலில் சீறி பாய்ந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் அடக்கிய மாடு பிடி வீரர்களுக்கும், மாடு பிடி வீரர்களின் கையில் சிக்காத காளைகளுக்கு விழா குழுவின் சார்பாக வெள்ளி காசு, பீரோ, கட்டில்,சைக்கிள், சேர், அண்டா, டைனிங் டேபிள், உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் ஏற்படும் வீரர்கள் மற்றும் பொது மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முதலுதவி சிகிச்சை மையம் மற்றும் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளன.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved