Also Watch
Read this
By: Web Team

தமிழக திருப்பதி என்றும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதுமான, கும்பகோணம் அருகேயுள்ள உப்பிலியப்பன் கோயிலில், வெங்கடாஜலபதி சுவாமி கோயிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி பக்தர்கள் குவிந்தனர்.
அதிகாலை நடை திறக்கப்பட்டு, சுப்ரபாத சேவையும் தொடர்ந்து விஸ்வரூப தரிசனமும் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்த மூலவர் வெங்கடாஜலபதி சுவாமி, உற்சவர் பெருமாளையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.